"அந்த பொண்ணு சூப்பரா இருக்கில்ல..." காய்ரா மகிழ்ச்சியுடன் கத்தினான்.
இடம்: கொச்சி
நிகழ்ச்சி: அனு - நரேஷ் திருமணம்
நான், ஆரா, சாந்தா, காய்ரா & வெண்ணை ராமன் ஐவரும் கொச்சி வந்திருந்தோம். கல்யாண வீடு என்றால் அழகான பெண்கள் இல்லாமலா...
"எந்த பொண்ணுடா?" - அருண்
"கல்யாண வீட்டுக்கு வந்துட்டு என்ன வேலைடா செய்யிறீங்க..." - வெண்ணை
"ஏண்டா இப்படி அலையுறீங்க..." - சாந்தா
"தாடி, உனக்கு வயசாயிடிச்சு.. சின்ன பசங்க இப்படி அப்படித்தான் இருப்பாங்க..."
"யாரு, நீ சின்ன பையனா, நாலு கழுதை வயசாயிடிச்சு உனக்கு..."
"உனக்கு பொறாமை தாடி..."
...
"வாங்கப்பா, எல்லோரும் மாடிக்கு போகலாம்... அங்க இருந்து பார்த்தா மண்டபம் முழுவதும் தெரியும்."
"போகலாம், போகலாம்... அப்பதான் அந்த பொண்ணு எங்க போனாலும் தெரியும்"
"உங்க கூட வந்தோம் பாரு, தலையெழுத்து..."
...
"வாங்கடா சாப்பிட போகலாம், வயிறு பசிக்குது"
"ஏண்டா வெண்ணை, அதுக்குள்ள என்ன பசி, அந்த பொண்ணே இன்னமும் சாப்பிட போகலை..."
"டேய், வேணாம்..."
"அதத்தானடா நாங்களும் சொல்லுறோம், இப்ப வேணாம், அந்த பொண்ணு போகும் போது நாமளும் சாப்பிட போகலாமுன்னு..."
வெண்ணை ராமனுக்கு மட்டும் நெற்றிக்கண் இருந்திருந்தால் நானும் காய்ராவும் அப்பவே எரிந்து சாம்பலாகி இருப்போம்.
...
"ஏண்டா அதுக்குள்ள எந்திருச்சுட்டீங்க, சாப்பிடலையா?"
"அந்த பொண்ணு எந்திரிச்சு போனப்புறம் இன்னமும் என்ன சாப்பாடு வேண்டியிருக்கு??..."
"தாங்க முடியலைடா சாமி..."
"போங்கடா, போங்க, மறந்துறாம கையை கழுவிட்டு போங்க..."
...
"இந்த ரெண்டு பேரும் எங்கடா போய் தொலைஞ்சானுங்க... stage-க்கு போகலாமுன்னு பார்த்தா ஆளையே காணோம்..."
"அந்த பொண்ணு எங்கயாவது கண்ணுல தென்படுதான்னு பாரு, இவனுங்களை ஈசியா கண்டு பிடிச்சிறலாம்..."
...
கடைசியில் வாழ்த்து கூறுவதற்காக மேடையேறினோம். வாழ்த்து கூறி, புகைப்படம் எடுத்து வந்தவுடன் சாந்தா சொன்னான்.
"வெண்ணைங்களா, அந்த பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சாம்..."
திடீரென கல்யாண மண்டபமே அமைதியானது போல தோன்றியது.
'ஏன் தாடி, இதை மொதல்லே விசாரிச்சு சொல்ல வேண்டியதுதானே... வீணா அலைஞ்சுருக்க மாட்டோம்ல..." - சோகத்துடன் சொன்னான் காய்ரா.
பின் குறிப்பு: இது ஒரு உண்மை கலந்த கற்பனைக் கதை.