"என்னடா, இன்னைக்கும் உருளைக்கிழங்கு சாம்பார்தானா?" என்று கேட்டபடி, ஒரு பையில் மாம்பழங்களோடு வெண்ணை (எ) வெங்கட்ராமன் வீட்டிற்குள் நுழைந்தபோது மணி இரவு பதினொன்று ஐந்து.
அன்று சனிக்கிழமை. அலுவலகம் விடுமுறை என்றாலும்கூட அழையா விருந்தாளியாக சென்று இரவு வருவது வெண்ணை ராமனின் வழக்கம். இல்லையென்றால் அவனுக்கு தூக்கம் வராது.
ஆரா வழக்கம் போல பத்து மணிக்கெல்லாம் முழுக்க போர்த்தியபடி தூங்கிக்கொண்டிருந்தான். நான், காய்ரா & சாந்தா Catherine Zeta Jones'ன் அழகை ஜொள்ளியபடி மாஸ்க் ஆப் Zorro பார்த்துக்கொண்டிருந்தோம்.
வெண்ணை ராமன், ஐந்து நிமிடத்தில் முகம் கழுவி பூ போட்ட லுங்கிக்கு மாறி சமையல் அறைக்குள் நுழைந்தான். போகிற வாக்கில் தொலைக்காட்சியை நியூஸ் சானலுக்கு மாற்றினான்.
"வெண்ணை, படம் பார்த்துக்கிட்டு இருக்குறது தெரியலை?"
"எத்தனை தடவை இந்த படத்த பார்ப்பீங்கடா..."
"நாங்க எத்தனை தடவை வேணும்னாலும் பார்ப்போம், உனக்கென்னடா..."
தட்டில் சோறோடு வந்து உற்காந்து டிவி பார்க்க ஆரம்பித்தான். கூட்டிற்கு ஒரு மாம்பழம்.
"இந்த உருளைக்கிழங்கு சாம்பாரைத் தவிர வேற எதுவும் செய்ய மாட்டீங்களாடா?" என்று அலுப்புடன் சாப்பிட ஆரம்பித்தான்.
எங்கள் அறையில் புளிக்குழம்பு, தக்காளி சாதம், புளியோதரை, தோசை என்று விதவிதமாக (?) செய்தாலும், அநேக நாள் உருளைக்கிழங்கு சாம்பார் & உருளைக்கிழங்கு கூட்டுதான். வெண்ணை ராமனுக்கு தினமும் வித்தியாசமாக சாப்பிட வேண்டும்.
"ஏண்டா வெண்ணை, லீவ் அன்னைக்கும் ஆபீஸ் போயிட்டு ராத்திரி வந்துட்டு, பேச்சைப்பாரு, ஒழுங்கா மூடிக்கிட்டு சாப்பிடு..."
"வாயை மூடிக்கிட்டு எப்படிடா சாப்பிடமுடியும்?"
"ஜோக் அடிக்கிறாராம்..., டெய்லி விதவிதமா சாப்பாடு வேணும்னா சீக்கிரம் வந்து சமையல் பண்ண வேண்டியதுதானே..."
"ரொம்ப பேசாதீங்கடா... நாளைக்குப் பாரு, நான் வித்தியாசமா ஏதாவது பண்ணுறேன்"
அன்று சனிக்கிழமை. அலுவலகம் விடுமுறை என்றாலும்கூட அழையா விருந்தாளியாக சென்று இரவு வருவது வெண்ணை ராமனின் வழக்கம். இல்லையென்றால் அவனுக்கு தூக்கம் வராது.
ஆரா வழக்கம் போல பத்து மணிக்கெல்லாம் முழுக்க போர்த்தியபடி தூங்கிக்கொண்டிருந்தான். நான், காய்ரா & சாந்தா Catherine Zeta Jones'ன் அழகை ஜொள்ளியபடி மாஸ்க் ஆப் Zorro பார்த்துக்கொண்டிருந்தோம்.
வெண்ணை ராமன், ஐந்து நிமிடத்தில் முகம் கழுவி பூ போட்ட லுங்கிக்கு மாறி சமையல் அறைக்குள் நுழைந்தான். போகிற வாக்கில் தொலைக்காட்சியை நியூஸ் சானலுக்கு மாற்றினான்.
"வெண்ணை, படம் பார்த்துக்கிட்டு இருக்குறது தெரியலை?"
"எத்தனை தடவை இந்த படத்த பார்ப்பீங்கடா..."
"நாங்க எத்தனை தடவை வேணும்னாலும் பார்ப்போம், உனக்கென்னடா..."
தட்டில் சோறோடு வந்து உற்காந்து டிவி பார்க்க ஆரம்பித்தான். கூட்டிற்கு ஒரு மாம்பழம்.
"இந்த உருளைக்கிழங்கு சாம்பாரைத் தவிர வேற எதுவும் செய்ய மாட்டீங்களாடா?" என்று அலுப்புடன் சாப்பிட ஆரம்பித்தான்.
எங்கள் அறையில் புளிக்குழம்பு, தக்காளி சாதம், புளியோதரை, தோசை என்று விதவிதமாக (?) செய்தாலும், அநேக நாள் உருளைக்கிழங்கு சாம்பார் & உருளைக்கிழங்கு கூட்டுதான். வெண்ணை ராமனுக்கு தினமும் வித்தியாசமாக சாப்பிட வேண்டும்.
"ஏண்டா வெண்ணை, லீவ் அன்னைக்கும் ஆபீஸ் போயிட்டு ராத்திரி வந்துட்டு, பேச்சைப்பாரு, ஒழுங்கா மூடிக்கிட்டு சாப்பிடு..."
"வாயை மூடிக்கிட்டு எப்படிடா சாப்பிடமுடியும்?"
"ஜோக் அடிக்கிறாராம்..., டெய்லி விதவிதமா சாப்பாடு வேணும்னா சீக்கிரம் வந்து சமையல் பண்ண வேண்டியதுதானே..."
"ரொம்ப பேசாதீங்கடா... நாளைக்குப் பாரு, நான் வித்தியாசமா ஏதாவது பண்ணுறேன்"
...
ஆக, அடுத்தநாள் வெண்ணை ராமனின் சமையல் என்று முடிவானது. இருந்தாலும் ரிஸ்க் எடுக்க விரும்பாத காய்ரா, தான் தக்காளி சாதம் செய்ய போவதாகவும், வெண்ணை ராமன் கூட்டு மட்டும் செய்தால் போதும் என ஒரு முடிவிற்கு வந்தனர்.
மதியம் ஒரு மணி வரைக்கும் வெண்ணை ராமன் சமையல் அறைக்குள் போகவே இல்லை.
'டேய், இன்னைக்கு நீ கூட்டு பண்ணுறேன்னு சொல்லியிருக்கே, மறந்துறாதே"
"அதெல்லாம் எனக்குத் தெரியும், இன்னும் அரை மணி நேரத்தில ரெடி ஆயிடும்" என்றபடி சமையல் அறைக்குள் நுழைந்தான்
அனைவரும் வெண்ணை ராமனின் சமையலை சுவைக்க ஆவலோடு காத்திருந்தோம். காய்ராவின் ஸ்பெஷல் தக்காளி சாதம் கமகமவென எங்கள் பசியைக் கிள்ளியது. சாப்பிடும் நேரம் வந்தது.
வெண்ணை ராமன் தான் செய்த கேரட் துருவலை கொண்டு வைத்தான். அத்தனை பெரும் அசந்து போய்விட்டோம்.
"எப்படி வெண்ணை இப்படி..."
"கலக்கிட்ட வெங்கட்ராமா..."
"எல்லாம் சரி, இதை செய்ய உனக்கு எதுக்குடா அரை மணி நேரம்?"
இப்படி எங்கள் அனைவரையும் அசர வைத்த வெண்ணை ராமனின் சமையல் குறிப்பு இதோ உங்களுக்காக...
வெங்கட்ராமனின் ஸ்பெஷல் கேரட் துருவல்:
தேவையான பொருட்கள்:
கேரட்: 1/4 கிலோ
எலுமிச்சை பழம்: 1
உப்பு (தேவையான அளவு)
செய்முறை:
முதலில் கேரட்டை கழுவி, தோல் சீவி பூப்போல துருவிக்கொள்ளவும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். துருவி வைத்த கேரட் மேல் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு விடவும். சுவையான கேரட் துருவல் தயார்.
சமைத்து செய்து பாருங்கள். உண்டு மகிழுங்கள்...
பின் குறிப்பு: இதன் பிறகு நாங்கள் வெங்கட்ராமனை சமையல் செய்ய நிர்பந்தித்ததே இல்லை...
ஆக, அடுத்தநாள் வெண்ணை ராமனின் சமையல் என்று முடிவானது. இருந்தாலும் ரிஸ்க் எடுக்க விரும்பாத காய்ரா, தான் தக்காளி சாதம் செய்ய போவதாகவும், வெண்ணை ராமன் கூட்டு மட்டும் செய்தால் போதும் என ஒரு முடிவிற்கு வந்தனர்.
மதியம் ஒரு மணி வரைக்கும் வெண்ணை ராமன் சமையல் அறைக்குள் போகவே இல்லை.
'டேய், இன்னைக்கு நீ கூட்டு பண்ணுறேன்னு சொல்லியிருக்கே, மறந்துறாதே"
"அதெல்லாம் எனக்குத் தெரியும், இன்னும் அரை மணி நேரத்தில ரெடி ஆயிடும்" என்றபடி சமையல் அறைக்குள் நுழைந்தான்
அனைவரும் வெண்ணை ராமனின் சமையலை சுவைக்க ஆவலோடு காத்திருந்தோம். காய்ராவின் ஸ்பெஷல் தக்காளி சாதம் கமகமவென எங்கள் பசியைக் கிள்ளியது. சாப்பிடும் நேரம் வந்தது.
வெண்ணை ராமன் தான் செய்த கேரட் துருவலை கொண்டு வைத்தான். அத்தனை பெரும் அசந்து போய்விட்டோம்.
"எப்படி வெண்ணை இப்படி..."
"கலக்கிட்ட வெங்கட்ராமா..."
"எல்லாம் சரி, இதை செய்ய உனக்கு எதுக்குடா அரை மணி நேரம்?"
இப்படி எங்கள் அனைவரையும் அசர வைத்த வெண்ணை ராமனின் சமையல் குறிப்பு இதோ உங்களுக்காக...
வெங்கட்ராமனின் ஸ்பெஷல் கேரட் துருவல்:
தேவையான பொருட்கள்:
கேரட்: 1/4 கிலோ
எலுமிச்சை பழம்: 1
உப்பு (தேவையான அளவு)
செய்முறை:
முதலில் கேரட்டை கழுவி, தோல் சீவி பூப்போல துருவிக்கொள்ளவும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். துருவி வைத்த கேரட் மேல் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு விடவும். சுவையான கேரட் துருவல் தயார்.
பின் குறிப்பு: இதன் பிறகு நாங்கள் வெங்கட்ராமனை சமையல் செய்ய நிர்பந்தித்ததே இல்லை...