Friday, June 17, 2011

ஒரு அரசியல் நகைச்சுவை பதிவு


முதல் படமே சூப்பர் ஹிட் கொடுத்துவிட்டு அடுத்த படத்துக்கு சரக்கு இல்லாமல் இருக்கும் டைரக்டர்கள் போல, பெரும் வரவேற்பு பெற்ற (?) முதல் பதிவுக்கு பின் என்ன எழுதுவது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தேன்...

சரி, முதல் பதிவு போல சொந்தக்கதையையே எழுதலாம் என்று பார்த்தால் அது ரொம்ப சோகக்கதையா இருக்கு என்று சிலர் சொல்லி விட்டார்கள்.. நிறைய பேர்(?) 'உங்களிடமிருந்து இன்னமும் நிறைய எதிர்பார்க்கிறோம்'-ன்னு வேற சொல்லிட்டாங்க, என்ன எதிர்பார்க்குறாங்கன்னு ஒண்ணுமே புரியலை, ஹி.. ஹி...

கடைசியில் கடந்த சில நாட்களில் படித்து, ரசித்த, சிரித்த இரண்டு செய்திகளை பதிவாக போடலாம் என்றதன் விளைவே இந்தப்பதிவு...

~
நகைச்சுவை-1

திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பகுதி நேர நடிகர்/இயக்குனர்/அரசியல்வாதி சீமான் "தமிழ்நாட்டில் ஒரு புரட்சியை நடத்திவிட்டு சத்தம் போடாமல் அமர்ந்திருக்கிறார் என் தம்பி விஜய். அவர் நடத்திய மவுன புரட்சிதான் இன்று ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படவே காரணமாக அமைந்தது," என்று பேசி இருக்கிறார்.

இப்படியெல்லாம் பேச இவர்களுக்கு எப்படித்தான் மனசு வருகிறதோ... ஒருவேளை திரும்பவும் திமுக ஆட்சி வந்துவிட்டால் வடை போய்விடுமோ என்ற பயத்தில், என்ன செய்வது தெரியாமல் கடைசி வரை அதிமுக-விற்கு ஆதரவு என்று வெளிப்படையாக சொல்லாதுதான் மவுன புரட்சியோ என்னமோ...

~
நகைச்சுவை-2

"மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டது!" என்று ரஜினி ஜெ.வுக்கு தொலைபேசியில் வாழ்த்து கூறினார் என தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டதாக ஒரு செய்தி.

நல்ல வேளை, இனி வாரம் ஒருமுறை பாராட்டுக்கூட்டங்களில் பொய்யாக கருணாநிதி அவர்களை பாராட்டிப் பேசவேண்டாம், தப்பித்தோம், பிழைத்தோம் என்று நினைத்து இப்படி சொன்னாரோ என்னவோ?

சில/பல வருடங்களுக்கு முன் 'ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது' என்று சொன்னதும் இதே வாய்தான்... ஒருவேளை சிங்கப்பூர் போய் வாய்மாற்று சிகிச்சை எதுவும் செய்து கொண்டாரா என தெரியவில்லை...

~

இன்னமும் நிறைய நகைச்சுவை செய்திகள் இருந்கின்றது - நேரம் கிடைத்தால் வாரம் ஒரு பதிவாவது எழுதலாம் என்றிருக்கிறேன், பார்க்கலாம்...

1 comment: